திருவண்ணாமலையில் நாளை மகா தீபத்திருவிழா : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலையில் மகா தீபத்திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபத்திருவிழா, நாளை நடைபெறுகிறது.

இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறவுள்ளன.