திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் மகாகார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர்-1ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வரும் டிசம்பர் 10-ம் தேதி மகாதீபம் ஏற்றப்படவுள்ளது.

இந்நிலையில் இன்று 4-ம் திருநாளான இன்று இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

அண்ணாமலையார் உற்சவ மூர்த்தியாக கற்பக விருட்ஷ வாகனத்தில் வீதியுலா வந்தார்.உண்ணாமலை அம்மன் காமதேனு வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.
வெண்சங்கு ஊதியும் நாதஸ்வரம் மேளதாளம் என பாட்டுமுரசு கொட்டியும் பாட்டுப்பாடி தேர் வீதியை ஆயிரக்கணக்கான மக்கள் வலம் வந்து தரிசனம் செய்தனர்