திருவாரூர் தொகுதியில் பிப்.,7 ந்தேதிக்குள் இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம்..

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி போட்டியிட்டு வென்ற திருவாரூர் சட்டப் பேரவை தொகுதி அவர் காலமானதால் அத்தொகுதிக்கு வரும் பிப்.,7 ந்தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

காலியாக உள்ள மற்றொரு தொகுதியான திருப்பரங்குன்றம் தொகுதிக்கு வழக்கு இருப்பதால் தற்போது தேர்தல் நடத்தவது சாத்தியமில்லை எனத் தெரிவித்துள்ளது.