திருவாரூர் அருகே குளத்தில் பேருந்து கவிழ்ந்து 40 பேர் காயம்..


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மினி பேருந்து குளத்தில் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு. விபத்தில் காயமடைந்த 40 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு வேகமாகச் சென்றபோது ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.