நாளை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தவறவிடாதீர்..

போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ளது.

இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ நோயை ஒழிக்க ஆண்டுக்கு இருமுறை சொட்டு மருந்து வழங்கப்படும்.

அதன்படி நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், விமானநிலையம்,

ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் நாளை சொட்டு மருந்து வழங்கப்படும்.

தமிழகத்தில் 40 ஆயிரம் முகாம்கள் மூலம் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தவறவிடாதீர், போலியோ வை விரட்டுவோம்.