டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கை எழும்பூர் நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை..

டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கை எழும்பூர் நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மேலும் 4 வார காலத்தில் டிடிவி தினகரன் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.1.85 கோடியை வெளிநாட்டு வங்கியில் டாலராக மாற்றியதில் முறைகேடு என வழக்கு தொடரப்பட்டது.

1996ல் அமலாக்கத்துறை டிடிவி தினகரன் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க தினகரன் கோரி இருந்தார்.

டிடிவி தினகரனுக்கு ஆவணங்களை வழங்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.