பதவியை காப்பாற்றவே அமமுகவினர் சிலர் அதிமுகவில் இணைந்துள்ளனர் : டிடிவி தினகரன்

ஒரு நிர்வாகி கட்சியை விட்டு செல்வதனால் இயக்கம் வீழ்ச்சி அடைந்து விடும் என்பதை எதிர்காலம் நிச்சயம் பொய்யாக்கும் என டிடிவி தினகரன் கூறினார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பதவியை காப்பாற்றவே அமமுகவினர் சிலர் அதிமுகவில் இணைந்துள்ளனர். ஒரு நிர்வாகி கட்சியை விட்டு செல்வதனால் இயக்கம் வீழ்ச்சி அடைந்து விடும் என்பதை எதிர்காலம் நிச்சயம் பொய்யாக்கும்.
நிர்வாகிகள் அமமுகவில் இருந்து வெளியேறுவது சசிகலாவுக்கு தெரியும்.
தமிழக அரசு ஆர்.கே.நகர் தொகுதியை புறக்கணித்து வருகிறது. பதவியை காப்பாற்றிக் கொள்ளவே இரத்தினசபாபதி, கலைச்செல்வன் மீண்டும் அணி மாறியுள்ளனர்.