தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன் மாற்றம் : புதிய எஸ்.பியாக ஜெயக்குமார் நியமனம்..

தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன் மாற்றப்பட்டு புதிய எஸ்.பியாக ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜெயக்குமார் விழுப்புரம் எஸ்பியாக பணிபுரிந்து வருகிறார்.

அருண் பாலகோபாலன் காத்திருப்போர் பட்டியலுக்க மாற்றப்பட்டுள்ளார்.

தென் மண்டல ஐ.ஐி சண்முக ராஜேஸ்வரன் இன்று ஓய்வு பெறுவதால் புதிய ஐ.ஜி.யாக எஸ்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் மண்டல ஐ.ஐி,யாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.முருகன் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜீ.யாக இருந்து வந்தவர்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கில் மாஜிஸ்திரேட்டை அவமதித்ததாக ஏற்கனவே தூத்துக்குடி கூடுதல் எஸ்.பி., டி.எஸ்.பி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Image