தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து மு.க. ஸ்டாலின் ஆறுதல்..


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டு படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அவரிடம் கதறி அழுது நேற்று நடைபெற்ற சம்பஙவ்களை விளக்கினர்.