ஆணவப்படுகொலையால் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்

ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட உடுமலை கவுசல்யாவுக்கு கோவையில் சக்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் – கவுசல்யா ஆகியோர் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  உடுமலைப்பேட்டையில் பட்ட பகலில் , கெளசல்யாவின் பெற்றோர்களால் சங்கர் படுகொலை செய்யப்பட்டார்.

அதில் இருந்து சாதி ஆணவ படுகொலைக்கு எதிராகவும், பெண்கள் ஒடுக்கப்படும் விஷயங்களில் செயல்பாட்டாளராகவும் கவுசல்யா இருந்து வருகிறார் .

இந்நிலையில் ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட கவுசல்யாவுக்கும், கோவையில் பறை இசைக்குழு நடத்தி வரும் சக்திக்கும் மறுமணம் நடைபெற்றது

தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சாதி மறுப்பு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்