உடுமலை சங்கர் கொலை வழக்கு : தூக்கு தண்டனை பெற்றவர்கள் மேல் முறையீடு..


தூக்கு தண்டனையை எதிர்த்து சங்கர் மனைவி கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில், தூக்கு தண்டனையை எதிர்த்து சங்கர் மனைவி கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீடு மனு குறித்து உடுமலை டிஎஸ்பி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.