உ.பியில் பிரியங்காவின் “கங்கை யாத்திரை” பரப்புரை தொடங்கியது..

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மக்களவை தேர்தல் பரப்புரையைத் தொடங்கி இருக்கிறார்.

கங்கை யாத்திரை என்ற பெயரில் 3 நாட்கள் 140 கிலோ மீட்டர் தூரம் பிரியங்கா பரப்புரைப் பயணம் மேற்கொள்கிறார்.

பிரயாக்ராஜின் மனையா காட் என்ற இடத்தில் இருந்து வாரணாசியின் ஆசிகாட் வரை அவர் பிரச்சாரம் செய்கிறார்.

இதையொட்டி பிரயாக்ராஜ் வந்த பிரியங்கா, ஆஞ்சநேயர் கோவில் மற்றும் திரிவேணி சங்கமத்தில் வழிபாடு நடத்தினார்.

பின்னர் படகு மூலம் அவர் பிரச்சார சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். முன்னதாக மக்களுக்காக பிரியங்கா எழுதிய கடிதத்தில், உத்தரப்பிரதேச மக்கள் கங்கையை சார்ந்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

அதே போன்று தானும் மக்களுடன் தொடர்பு கொள்ள கங்கை நதியை சார்ந்துள்ளதாக தெரிவித்தருந்தார்.