உத்திரகோசமங்கை கோயிலில் ஐஜி.பொன்.மாணிக்கவேல் ஆய்வு..

இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் உள்ள மரகத நடராஜர் சிலையை சில நாட்களுக்கு முன்னர் முயற்சி நடந்தது.

இதனையடுத்து சிலை கடத்தல் ஐஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் , கோயிலில் ஆய்வு செய்தனர்.

ஆகஸ்ட் மாதம் கோயிலுக்கு வந்த பொன்.மாணிக்கவேல் வந்து ஆய்வு செய்தார். அப்போது, பாதுகாப்புக்கு கிரில் கேட்கள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தன.

அதனை மாற்றிவிட்டு, இரும்பு கேட் அமைக்க கூறியிருந்தார். தற்போது ஆய்வுக்கு சென்ற போது, அந்த கேட்கள் மாற்றப்படவில்லை. பூட்டுகளை மட்டும் மாற்றியிருந்தனர்.

இதனால், அதிருப்தி தெரிவித்த பொன்.மாணிக்கவேல், கோயில் பாதுகாப்பு விவகாரத்தில் அதிகாரிகள் அஜாக்கிரதையாக உள்ளதாகவும், இனியாவது, கதவுகளை மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.