அண்மையில் திரைக்கு வந்த வடசென்னை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முதலிரவுக் காட்சி நீக்கப்படும் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள இயக்குனர் வெற்றி மாறன், வடசென்னை திரைப்படத்தில் மீனவ சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக சில அமைப்புகள் கருத்து தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.
அதில், கப்பலில் நடைபெறும் முதலிரவுக் காட்சிக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளதால், அந்தக் காட்சி அடுத்த 7 முதல் 10 நாட்களுக்குள் படத்தில் இருந்து நீக்கப்படும் என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களை வைத்து சினிமா மற்றும் அரசியல் செய்வது தங்கள் நோக்கமல்ல என்று கூறியுள்ள வெற்றிமாறன், யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடசென்னை திரைப்படத்தில் மீனவர் படகில் முதலிரவு காட்சி அமைத்ததிற்கு, மீனவ அமைப்புகள் எதிர்ப்பு எதிரொலி
இயக்குனர் #வெற்றிமாறன் மன்னிப்பு கேட்டார், காட்சி நீக்கப்படும் என உறுதி@dhanushkraja @aishu_dil pic.twitter.com/NQkyIfDHku
— Sivaraman Karnan (@Sivaraman_PK) October 22, 2018