வடலூர் சத்தியஞான சபையில் தைப்பூசவிழா தொடங்கியது..

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடி பசிப்பிணிப் போக்க போராடினார் வள்ளலார்.

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படும்.

148வது ஜோதி தரிசனம் 20ம் தேதியான இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு முதலில் தருமசாலையில் கொடியேற்றப்பட்டது.