வைகை அணை 69 அடியை எட்டியது : 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..

தேனி மாவட்டம் வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக அதன் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தற்போது நீர்மட்டம் 69 அடியை எட்டியுள்ளதால், உபரிநீர் விநாடிக்கு 3650 கனஅடி வீதம் வெளியேற்றப்படுகிறது.

அதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது