உங்களுக்கு அருவெறுப்பா இல்லையா? : தொண்டனின் கேள்விக்கு மன்னிப்பு கேட்ட உதயநிதி..

திமுக மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்ட பேனரில் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் இடம் பெற்றதற்கு, தொண்டர் ஒருவர் கேட்ட கேள்விக்கு உதயநிதி மன்னிப்பு கேட்டுள்ளார்.

திமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் கடந்த 4ம் தேதி நடைப்பெற்றது. இந்த கூட்டம் தஞ்சாவூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைப்பெற்றது.

இங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

அறுவெறுப்பா இல்லையா?

இந்த பேனரைப் பார்த்த ஒரு திமுக தொண்டர் உதயநிதியின் டுவிட்டர் முகவரியை குறிப்பிட்டு, “Mr @Udhaystalin ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பா இருக்கு தெரியுமா?

உங்களுக்கு தோணலையா?
முன்னனி தலைவர்கள் மேடைல உங்க போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன?” என மிக காட்டமாக கேள்வி கேட்டிருந்தார்.