வி.ஏ.ஓ., குரூப்-4 தேர்வுகள் ஒன்றிணைந்து சிசிஎஸ்இ-4 தேர்வாக அறிவிப்பு..


2018 பிப்ரவரி 11ம் தேதி வி.ஏ.ஓ., குரூப்-4 தேர்வுகள் ஒன்றிணைந்து சிசிஎஸ்இ-4 என்ற பெயரில் தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க டிசம்பர்-13 ம்தேதி கடைசி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தேர்வுகளையும் தனித்தனியே நடத்த ரூ.15 கோடி செலவாகும். காலதாமதம், பணவிரயத்தை தவிர்க்கவே ஒன்றிணைத்து நடத்துவதாக டி.என்.பி.எஸ்.சி விளக்கமளித்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை(நவ.14) வெளியிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.