வேலூர் அருகே பெரியார் சிலை உடைப்பு : இருவர் கைது..


வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன் இருந்த பெரியார் சிலையை சேதப்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூர் பா.ஜ., நகர செயலாளர் முத்துராமன் மற்றும் பிரான்சிஸ் என்பவர்களை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.