சொராபுதீன் வழக்கு : 22 பேர் விடுவிடுப்பு..

சொராபுதீன் போலி எண்கவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த மும்பை சிபிஐ சிறப்பு நீதி மன்றம் இவர்களை விடுவித்துள்ளது.

கடந்த 2005 -ல் நவம்பர் 25ந்தேதி குஜராத்தில் சொராபுதீன் சேக் மனைவியுடன் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது கைது செ ய்யப்பட்டு நவம்பர் 28ந்தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்..

இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றம் சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.