விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு..


விருதுநகர் மாவட்டம் ஓ.கோவில்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மாவட்ட தீயணைப்பு வீரர்கள், போலீசார் விபத்து ஏற்பட்ட ஆலைக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெடி விபத்தில் தொழிலாளர்கள் முருகன், சந்திரன் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.