எந்த முறைகேடும் நடைபெறவில்லை: விஷால் பதில்

தயாரிப்பாளர் சங்கத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என சங்கத்தின் தலைவரும் நடிகருமான விஷால் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்க நிதி ரூ.7 கோடியை விஷால் மோசடி செய்து விட்டதாக கூறி, தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட சிலர் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு நேற்று (19.12.18) பூட்டு போட்டனர். ஆனால், அவர்களது குற்றச்சாட்டை விஷால் மறுத்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே பொதுக்குழுவில் பிரச்சனை செய்தவர்கள்தான். இளையராஜாரவை கவுரவிக்கும் நிகழ்ச்சியை நடத்த விடக் கூடாது என்பதே அவர்களது நோக்கம். அந்த நிகழ்ச்சி நடந்தே தீரும். அதன் மூலம் உறுப்பினர்களுக்கு நிலம் வாங்கித் தருவோம். மற்றபடி எந்த முறைகேடும் நடைபெறவில்லை. தயாரிப்பாளர் சங்க கணக்கு விவரங்கள் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும்.

இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.