வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம்…


தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான 4-ம் கட்ட சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள அக்டோபர் மாதம் வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் செப்டம்பர் 9, 23 மற்றும் அக்டோபர் 7 ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான 4-ம் கட்ட சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும், 67 ஆயிரத்து 654 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.