தீவிரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் : ராகுல்…

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து

ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்த பல வீரர்கள் இன்னும் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புல்வமா தாக்குதல் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களில் புல்வமா தாக்குதலை கண்டித்தும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் மிகவும் துயரமான சம்பவமாகும், இதுபோன்ற தாக்குதல்களை ஏற்க முடியாது.

நமது நாடு 40 ராணுவ வீரர்களை இழந்து விட்டது. எந்தஒரு சக்தியும் இந்தியாவை பிளவுப்படுத்த முடியாது.
வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு நாடு உறுதுணையாக இருக்கும்.

பயங்கரவாதிகளுடன் ஒருபோதும் சமரச பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் அறுவெறுக்கத்தக்கது.

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம்.

இது துக்கம் அனுசரிக்க வேண்டிய நேரம் என்பதால் எந்த சர்ச்சைக்கும் இடமில்லை. பயங்கரவாத எதிர்ப்பு விவகாரத்தில் அரசை முழுவதுமாக ஆதரிப்பதே எங்கள் நிலைப்பாடு.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு, பாதுகாப்பு படையினருக்கு முழு ஆதரவை வழங்குகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.