கபசுர குடிநீர் என்பது என்ன?…

கபம் என்ற சளியால் வரும் சுரம் என்ற காய்ச்சலை போக்கும் அருமருந்து இந்த கபசுர குடிநீர் ஆகும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அகத்தியராலும், மற்ற சித்தர்களாலும் கண்டுபிடிக்கப்பட்டது இந்த கபசுர குடிநீர். தற்போதைய சித்த மருத்துவர் எவரும் இதை கண்டுபிடிக்கவில்லை.

மேலும் கொரோனா கிருமியால் வரும் நுரையீரல் சளியும், காய்ச்சலும் இந்த கபசுர வகையை சார்ந்தவையே. அதனால் கொரோனா காய்ச்சலுக்கு எதிராக கபசுர குடிநீர் கொடுக்கலாம். ஆனால் வாதசுர குடிநீர் கொரோனாவுக்கு ஏற்றது அல்ல.

கபசுர குடிநீரில் சித்தர்கள் பதினைந்து மூலிகைகளை பரிந்துரைக்கின்றனர். அவை

01. அக்காரகரம்,
02. ஆடாதோடை,
03. கற்பூரவள்ளி,
04. கடுக்காய்த்தோல்,
05. கோரைக்கிழங்கு,
06. கோஷ்டம்,
07. சிறுக்கன்சேரி,
08. சிறுதேக்கு,
09. சீந்தல்கொடி,
10. சுக்கு,
11. திப்பிலி,
12. லவங்கம்,
13. முள்ளி வேர்,
14. நிலவேம்பு,
15. வட்டத்திருப்பி.

இந்தப் பதினைந்து மூலிகைகளையும் சம அளவு எடுத்து, அரைத்து, அதில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அரைலிட்டர் தண்ணீரில் கலக்கவும். பின்பு இந்த நீரை 50 முதல் 100 மில்லியாக வரும் வரை கொதிக்கவைத்து அதை தேனுடன் கலந்து சாப்பிடலாம்.

ஒருவருக்கு 30 மில்லி சாப்பிட்டாலே போதுமானது.

பொதுவாக நாட்டுமருந்து கடைகளில் இந்த குடிநீர் சூரணமாக அரைத்து வைக்கப்பட்டு இருக்கும். ஆனால் சூரணமாக சாப்பிடுவதை விட, இந்தப் பொருட்களை எல்லாம் அரைகுறையாக அரைத்து கஷாயமாக சாப்பிடுவது சிறந்த பலன் அளிக்கும்.

கபசுர குடிநீர் இப்போது வந்த கொரோனாவுக்கு மட்டுமல்ல. இனிவரும் காலத்தில் ஏதாவது ஒரு மொரோனா வந்தாலும் கூட குடிக்கலாம். நன்கு வேலை செய்யும். மேலும் இதை ஏற்கனவே சித்தர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். தற்போது எவரும் இதைக் கண்டுபிடிக்கத் தேவை இல்லை. படித்து அறிந்து கொண்டால் போதுமானது.

கீழே பொருள்களின் பெயரும் படமும் கொடுக்கப்பட்டுள்ளது. சூரணமாக அரைத்து வைக்கப்பட்டிருக்கும் எதையும் வாங்க விரும்பவில்லை எனில் நீங்களே தனித்தனியாக பார்த்து வாங்கி அரைத்து சாப்பிடலாம்.

சித்தர் அறிவியல்

நன்றி

நாட்டு மருந்து முகநுால் பதிவு