பாலியல் தொழிலுக்காக மலேசியாவுக்கு விற்கப்பட்ட தமிழக பெண் மீட்பு..


மலேசியாவில் பாலியல் தொழிலுக்காக விற்கப்பட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த பானுப்பிரியா என்ற பெண் மீட்டுக் கொண்டு வரப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கமரக்காடு கிராமத்சை் சேர்ந்தவர் சேகர். இவரது மகள் பானுப்பிரியா (25). கணவரை இழந்தை பானுப்பிரியாவுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. வறுமையை சமாளிக்க பட்டுக்கோட்டையில் ஹோட்டல் ஒன்றில் இவர் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், அந்த ஹோட்டலில் வேலை பாரத்த பெண் ஒருவர் மலேசியாவில் அதிக சம்பளத்துக்கு ஹோட்டல் வேலை இருப்பதாக கடந்த டிசம்பர் மாதம் அனுப்பி வைத்தார்.

தொடர்ந்து மலேசியாவில் ஹோட்டல் வேலை தராமல், அங்குள்ள சீன நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு 6,000 ரூபாய்க்கு விற்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து எப்படியோ தப்பி வெளியே வந்த அவர், மலேசியாவில் இருக்கும் இந்திய தூதரதக்தில் சென்று தஞ்சம் அடைந்தார். மேலும், தஞ்சாவூரில் இருக்கும் தனது தாயிடமும் போன் செய்து நடந்தவற்றை கூறியுள்ளார்.

பின்னர், அவரது தாய் பங்கஜவல்லி, தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தார். இதையடுத்து மலேசிய தமிழ் அமைப்புகள், இந்திய தூதரகம் உதவியுடன் பானுப்பிரியா மீட்டு நேற்று திருச்சி கொண்டுவரப்பட்டார். தன்னைப் போல் பல பெண்கள் மலேசியாவில் வேதனைகளை அனுபவித்து வருவதாகவும், தன்னை விற்ற பட்டுக்கோட்டை பெண் மீது புகார் அளிக்கவுள்ளதாகவும் பானுப்பிரியா கண்ணீர் மல்க கூறியுள்ளார்.