பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு..

அனைத்துத் தளங்களிலும் பெண்ணினம் சம உரிமை பெற்று தலை நிமிர தீர்ப்பு அடித்தளம் அமைக்கும் என்று திமுக தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பூர்வீக சொத்தில் சம பங்கினை பெண்கள் பெறலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்.

பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டென 1989ம் ஆண்டே சட்டம் கொண்டு வந்த முத்தமிழறிஞர் கலைஞர் – தி.மு.கவுக்கு கிடைத்த வெற்றி இது!”
மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவு..
பூர்வீக சொத்தில் சம பங்கினை பெண்கள் பெறலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்.

பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டென 1989ம் ஆண்டே சட்டம் கொண்டு வந்த முத்தமிழறிஞர் கலைஞர் – திமுகவுக்கு கிடைத்த வெற்றி இது!

உரிமை கொண்டவர்களாக பெண்ணினம் உயர அடித்தளம் அமைக்கும் தீர்ப்பு!
பெண்களுக்கு பிரிக்கப்படாத பூர்வீக சொத்திற்கு சம உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது குறிபபிடத்தக்கது.