உலகக்கோப்பை தொடரில் பாக். விளையாட தடையில்லை : ஐசிசி…

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க முடியாது என ஐசிசி கைவிரித்து விட்டது.

தீவிரவாதத்துக்கு புகலிடமாக உள்ள நாட்டின் கிரிக்கெட் அணியை உலகக்கோப்பை தொடரில் அனுமதிக்கக் கூடாது என ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் அனுப்பி இருந்தது.

இதுதொடர்பாக துபாயில் கூடி ஐசிசி ஆலோசனை நடத்தியது. முடிவில் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என கூறிய ஐசிசி,

கிரிக்கெட் உறவை துண்டிப்பது தங்கள் அதிகார வரம்புக்கு உட்படாதது என்றும் இதுகுறித்து இருநாட்டு அரசாங்கங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து விட்டது.