தமிழகத்தில் பாரத் நெட் என்ற இன்டர்நெட் திட்ட டெண்டர் ரத்து : மத்திய அரசு நடவடிக்கை..

தமிழகத்தில் பாரத் நெட் என்ற இன்டர்நெட் திட்ட டெண்டரை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

டெண்டர் விதிகளை முறையாக பின்பற்றவில்லை என கூறி மத்திய வர்த்தக அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில் 12 ஆயிரம் கிராமங்களுக்கு அதிவேக இன்டர்நெட் இணைப்பு தர பாரத் நெட் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த திட்ட டெண்டரில் முறைகேடு இருப்பதாக திமுக மற்றும் அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது.
இந்நிலையில் மத்திய அரசு பாரத் நெட் டெண்டரை ரத்து செய்து அதில் உள்ள குறைபாடுகளை அதாவது முறைகேடு நடக்க வாய்ப்புள்ளவற்றை திருத்தி புதிய டெண்ர் விடுமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.