தி.மு.க. இளைஞரணிக்கு வயது 41…தொடங்கப்பட்டது எப்படி?

திமுக இளைஞரணி தொடங்கப்பட்டு 41 ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையில், இளைஞரணியினர் சமூகவலைத் தளங்களில் அதனைக் கொண்டாடி பதிவுகளை இட்டு வருகின்றனர்.

இதுகுறித்து இளைஞரணி சார்ந்த முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவு:

திமுக இளைஞரணி துவங்கப்பட்டு இன்றோடு 41-ஆண்டுகளை எட்டிவிட்டது.

அன்று ‘கோபாலபுரம் இளைஞர் தி.மு.க’ எனத் தொடங்கப்பட்ட. இத்தகு சிறப்பு வாய்ந்த இந்த அமைப்பதான் 1980ல் ஜூலை 20ம் தேதி மதுரை ஜான்சிராணி பூங்காவில் தலைவர் #கலைஞர் அவர்களால் ‘தி.மு.க-வின் இளைஞரணி’ என முறையாக துவங்கி வைக்கப்பட்டது..

இந்தியவில் ஒரு மாநிலக் கட்சி  முதன்முதலில் ‘இளைஞரணி’ என்ற அமைப்பை தோற்றுவித்து தி.மு.க.தான்.

1981ல் இளைஞரணி அமைப்பாளர்கள் ஐந்து பேரில் ஒருவராக தளபதி மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

1982ம் ஆண்டு மே மாதம் திருச்சியில் நடந்த இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் கழக இளைஞரணியின் அமைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார் தளபதி மு.க.ஸ்டாலின். பின்னர் இளைஞரணியின் செயலாளராகப் பொறுப்பேற்று செயல்படத் தொடங்கினார்.

கழகத்தின் தலைமை அலுவலகமாக இருந்த அன்பகம் கட்டடத்தை இளைஞரணியின் அலுவலகமாகப் பெறுவதற்காகத் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 11 லட்ச ரூபாய் நிதி திரட்டி அதனை கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனிடம் வழங்கி, அன்பகத்தை இளைஞரணியின் தலைமை அலுவலகமாக்கினார் மு.க.ஸ்டாலின்.

தி.மு.க எதிர்க்கட்சியாக செயலாற்றும் காலகட்டங்களில் தலைவர் கலைஞர் அறிவித்த போராட்டங்களை முன்னின்று நடத்தியதில் இளைஞரணிக்கு முக்கியப் பங்கு உண்டு.

போராட்டங்களின் வடிவமான ‘ஊர்வலம்’ என்ற சொல் மாறி, ‘பேரணி’ என்ற சொல் நடைமுறைக்கு வந்ததற்குக் காரணம் கழக இளைஞரணியின் இராணுவ மிடுக்கு போன்ற அணிவகுப்புதான்.

தற்போது 41-ஆண்டுகளுக்கு மேலாக வலிமையாகச் செயல்பட்டு வருகிறது தி.மு.க இளைஞரணி.

இந்தியாவில் லட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட வலிமையான இளைஞரணியைப் பெற்றிருக்கும் பேரியக்கமாகத் திகழ்கிறது தி.மு.க.

தற்போது புதிதாக இளைஞரணி செயலாளராகப் பொறுப்பிலிருக்கும் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆசியோடும் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடும் இளைஞரணியை சிறப்புடன் வழிநடத்திச் செல்கிறார்