தமிழ்நாடு சீருடைப் பணியாளர்களுக்கான தகுதித் தேர்வு எப்போது?

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்களான இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைக் காவலர்கள், தீயணைப்பாளர் பதவிகளுக்காக கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்தப் பணிகளுக்கான பொதுத்தேர்வு வரும் 26ஆம் தேதி முதல் 20 மையங்களில் நடத்தப்பட இருப்பதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் இதற்கான அழைப்புக் கடிதத்தை WWW.tnusrbonline.org என்ற இணையதளத்தில் பதிவுறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.