உலகில் அதீத வறுமை வாட்டும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 3-ஆம் இடம்..

உலகில் அதீத வறுமைவாட்டும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3 -வது இடத்தில் உள்ளது.

தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பசியின் கொடுமையை அப்போதே கூறினார் பாரதியார்.அந்த கொடமை இன்றும் தீரவில்லை.

WorldPovertyClock என்ற அமைப்பின் புள்ளி விவரத்தை மேற்கோள்காட்டி TheSpectatorIndex என்கிற அறிக்கையில் உலகில் அதீத வறுமை வாட்டும் நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ,முதல்இடத்தில் நைஜீரியாவும் , இரண்டாவதுஇடத்தில் காங்கோவும் ,
மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.
2014ஆம் ஆண்டு ,இந்தியா 11ஆம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.