கள்ளக் காதலுக்காக பெற்ற பிள்ளைகளையே விஷம் கொடு்ததுக் கொன்ற விபரீத அழகி!

 

கள்ளக் காதலுக்காக பெற்ற பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டுத் தப்பிச் சென்ற இளம்பெண் போலீசாரிடம் சிக்கினார்.

சென்னை குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளை, அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் வசித்து வரும் வங்கி ஊழியர் விஜய்க்கு அபிராமி என்ற மனைவியும், அஜய் என்ற மகனும் காருண்யா என்ற மகளும் இருந்தனர்.

கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கிடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு விஜய் வேலைப்பளு காரணமாக வங்கியில் இருந்து வீடு திரும்ப தாமதமானது. சனிக்கிழமை அதிகாலை வீட்டிற்கு சென்ற விஜய், வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்த கதவை திறந்து உள்ளே சென்றார்.

அங்கு  அவரது மகனும் மகளும் வாயில் நுரைதள்ளிய நிலையில் சடலமாக கிடந்தனர். விஜயின் மனைவியும், குழந்தைகளின் தாயுமான அபிராமியை காணவில்லை. விஜய்யின் அழுகை சத்தம் கேட்டு கூடிய அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டு விட்டு ஸ்கூட்டியில் வலம் வரும் அபிராமி, அதே பகுதியில் பிரியாணி கடையில் வேலை பார்த்த 23 வயதான இளைஞர் சுந்தரம் என்ற நபருடன் நெருங்கி பழகியதாக தெரிகிறது. அபிராமியின் கள்ளக் காதல் விவகாரத்தை அறிந்த கணவர் விஜய் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னரும் சுந்தரத்துடனான கள்ளக்காதலை அபிராமி விடாமலே தொடர்ந்துள்ளார். இந்த நிலையில்தான் குழந்தைகள் இருவருக்கும் பாலில் விஷம் கொடுத்து கொன்றுள்ளார் அபிராமி.

இதையடுத்து அபிராமியின் காதலன் சுந்தரத்தை பிடித்து விசாரித்த போது கொலைக்கான அதிர்ச்சிகரப் பின்னணி அம்பலாமாகி உள்ளது.

23 வயதான சுந்தரத்திற்கு ஏற்கனவே திருமணமான நிலையில் அவருடன் காதல் கொண்ட அபிராமி அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இவர்களது முறையற்ற காதல் விவகாரம் வெளியே தெரிய வந்ததால் வீட்டை விட்டு வெளியேறி, கேரளாவுக்குச் சென்று சுந்தரத்துடன் வாழ்க்கை நடத்த அபிராமி திட்டமிட்டுள்ளார்.

கணவரும், குழந்தைகளும் உயிரோடு இருந்தால் இடையூறாக இருக்கும் என்று அவர்களை தீர்த்துக் கட்ட இருவரும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி வழக்கமாக இரவில் பால் அருந்தும் போது விஷத்தை கலந்து கொடுத்து தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர்.

அதன்படி சம்பவத்தன்று 3 பேருக்கும் கொடுக்கும் பாலில் கொடிய விஷத்தை அபிராமி கலந்து வைத்துள்ளார். பெற்ற குழந்தைகள் என்ற இரக்கம் இல்லாமல் இரு குழந்தைகளுக்கு விஷம் கலந்த பாலை கொடுத்து தாய் அபிராமியே கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இரு குழந்தைகளும் பாலை குடித்து விட்டு பரிதாபமாக இறந்து போக, கணவர் விஜய் வீட்டிற்கு வர தாமதமானதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் கூறப்படுகின்றது. குழந்தைகள் கொல்லப்பட்டதும் அங்கு சென்ற சுந்தரம், வீட்டில் இருந்த ஸ்கூட்டியில் அபிராமியை அழைத்து கொண்டு கோயம்பேடு சென்று பேருந்து மூலம் நாகர்கோவிலுக்கு தப்பிக்க வைத்துள்ளார். அபிராமி கேரளா சென்றதும், ஒரு சில நாட்கள் கழித்து, தாமும் கேரளாவுக்குச் செல்ல முடிவு செய்த சுந்தரம், ஸ்கூட்டியை கோயம்பேட்டிலேயே விட்டுவிட்டு, பேருந்து மூலம் மூன்றாம் கட்டளை பகுதிக்கு வந்து, மீண்டும் பிரியாணி கடையிலேயே வேலைபார்த்துள்ளார்.

அபிராமியின் வீட்டில் இருந்து விஷபாட்டில் மற்றும் விஷம் கலந்த பால் ஆகியவற்றை சேகரித்த தனிப்படை போலீசார், கோயம்பேட்டில் அனாதையாக நின்ற அபிராமியின் ஸ்கூட்டியையும் கைப்பற்றினர். சுந்தரத்தை பிடித்து விசாரணை நடத்தியதுடன், அவரை நாகர்கோவிலுக்கு அழைத்துச் சென்று கேரளாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற அபிராமியையும் கைது செய்தனர். சுந்தரத்துடன் மட்டுமல்லாமல் மேலும் சில ஆண் நண்பர்களுடன் நெருங்கி பழகி வந்தது அவரது செல்போன் நம்பரை ஆய்வு செய்த காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

A young mother killed her two kids for illegal relationship