பட்டாசு விற்பனைக்கான தடையை நீக்க வலியுறுத்தி 4 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் கடிதம்..

டெல்லி, ராஜஸ்தான், அரியானா, ஒடிசா மாநிலங்கள் பட்டாசு விற்க தடைவிதித்துள்ளன. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 முதல்வர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பட்டாசு விற்பனைத்தடையை விலக்கிக் கொள்ள வலியுறுத்தியுள்ளார்
உச்சநீதிமன்றம், பசுமை தீர்ப்பாயம் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும் என்று 4 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
பட்டாசுகளை அனுமதிக்கக்கோரி டெல்லி, ராஜஸ்தான், அரியானா, ஒடிசா மாநில முதல்வர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

  • உச்சநீதிமன்றம், பசுமை தீர்ப்பாயம் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.