ஜப்பான் ஒம்ரான் ஹேல்த்கேர் நிறுவனத்துடன் முதல்வர் முன்னிலையில் தமிழக அரசு ஒப்பந்தம்..

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறைப் பணயமாக புதிய தொழில் வளர்ச்சிக்கு தமிழகத்தில் தொழில் தொடங்க வலியுறுத்தி சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சென்றுள்ளார்.


இன்று டோக்கியோவில், ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான ஒம்ரான் ஹேல்த்கேர் நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக புதிய தொழிற்சாலையை நிறுவிடும் வகையில்,
தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஓம்ரான் ஹேல்த்கேர் நிறுவனத்திற்கும் இடையே, ரூ. 128 கோடி முதலீட்டில் தானியங்கி இரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.