நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கஜா புயலால் நாகை மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.

இந்நிலையில், கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாகை கோட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை  அளிக்கப்பட்டு உள்ளது என  மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்