பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா இராணுவ முகாமில் இன்று அதிகாலை துப்பாக்கிச்சூடு : 4 பேர் உயிரிழப்பு…

பஞ்சாப் – பதிண்டா இராணுவ முகாமில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு, தீவிரவாத தாக்குதல் இல்லை என பஞ்சாப் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.

2 நாட்களுக்கு முன்பு 28 தோட்டாக்களுடன் துப்பாக்கி காணாமல் போனதாகவும், இந்த சம்பவத்தின் பின்னணியில் சில ராணுவ வீரர்கள் இருக்கலாம் என தகவல்.
பதிண்டா ராணுவ முகாமில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
பதிண்டா ராணுவ முகாமில் இரு நாட்களுக்கு முன்பு 28 குண்டுகளுடன் துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பத்திண்டா மாவட்டத்தில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நான்கு பேரும் ராணுவ வீரர்கள் என இந்திய ராணுவம் அறிவிப்பு துப்பாக்கி சூடு பயங்கரவாத தாக்குதல் இல்லை என முதல் கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது