தமிழகத்தில் ஆக.1-ஆம் தேதி முதல் பல்கலைக்கழங்கள், கல்லூரிகள் திறக்கப்படும் : உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி..

தமிழத்தில் கரோனா பரவல் காரணமாக திறக்கப்படாமல் உள்ள பல்கலைக்கழங்கள் கல்லூரிகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.

இன்று 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் கலந்து ஆலோசித்தார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசும் போது பல்கலைக்கழங்கள் கல்லூரிகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் எனத் தெரிவித்தார்.