விஜய் சேதுபதியின் மகளுக்கு டிவிட்டில் வக்கிர மிரட்டல் கனிமொழி எம்.பி கண்டனம்..

நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை 800 என்ற பெயரில் படமாக்க திட்டமிட்டனர். அதில் முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக 800 போஸ்டர் வெளிவந்த. இந்நிலையில் தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள்,தமிழ் இயக்கங்கள் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக வலியுறுத்தினர்..
முத்தையா முரளிதரன் தன் படத்திலிருந்து உங்களின் கலைப்பயணம் தடைபட்டுவிடக்கூடாது அதனால் படத்திலிருந்து விலகுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். அதற்கு தனது டிவிடடரில் நன்றி,வணக்கம் என பதிவிட்டு கடந்த 2 வாரமாக நடந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இத்தைகைய சூழலில் டிவிட்டரில் ஒருவர் விஜய் சேதுபதியின் மகளுக்கு வக்கிர மிரட்டல் விட்டார்..
இத்தகைய கயவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
திமுக எம்.பி கனிமொழி தனது டிவிட்டர் பதிவில்
விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட.

பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்