வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக 10 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்


வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பாக 10 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

10 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை வாக்காளர் பட்டியல் கண்காணிப்பாளராக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் நடைபெறும் திருத்தங்கள் குறித்து சிறப்பு அதிகாரி கண்காணிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியல் தொடர்பான வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் புகார்களை சிறப்பு அதிகாரி விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3,4 மாவட்டங்களுக்கு ஒரு அதிகாரி வீதம் 10 அதிகாரிகளை நியமித்துள்ளது தேர்தல் ஆணையம்.

மாவட்டந்தோறும் ஆய்வு செய்து, அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.