உலகக்கோப்பை ஹாக்கி: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி …

இன்று தொடங்கிய உலகக்கோப்பை ஹாக்கித் தொடரில் இந்திய அணி தென்ஆப்பிரிகா அணியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் பயணத்தை தொடங்கியுள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் ஆண்களுக்கான உலகக்கோப்பை ஹாக்கி தொடர் இன்று தொடங்கி வருகின்ற டிசம்பர் 16ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் 16 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.

சி பிரிவில் பெல்ஜியம், கனடா, தென் ஆப்பிரிகா, இந்தியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

இதில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிகா அணிகள் மோதிக் கொண்டன.

இதில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரா் மந்தீப் சிங் முதல் கோல் அடித்து அணியின் கோல் கணக்கை தொடங்கி வைத்தாா்.

அடுத்ததாக ஆகாஷ்தீப் சிங், லலித் உபத்யாயா தலா ஒரு கோல் அடித்தனா். மேலும் சிம்ரஞ்ஜித் சிங் 2 கோல்கள் அடித்து அசத்தினாா்.