கச்சத்தீவு விவகாரம்: மோடி செய்தது என்ன? ப.சிதம்பரம் கேள்வி..

பிரதமர் மோடி செய்தது என்ன? 2000 சதுர கி.மீ இந்திய பூமியைச் சீனா அபகரித்திருக்கிறது. ஆனால், எந்தச் சீனத் துருப்புகளும் இந்திய மண்ணில் இல்லை என்று சொல்லி சீனாவின் ஆக்கிரமிப்பை மோடி நியாயப்படுத்தினார் என்று ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இந்தியா கச்சத்தீவை இலங்கைக்கு அளித்தது தொடர்பான ஆர்.டி.ஐ தகவல்களை வெளியிட்டு தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். மக்களவைத் தேர்தலையொட்டி, கச்சத்தீவு விவகாரம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அறிந்ததாக கூறியதில் பல முரண்பாடுகள் உள்ளது.