புதுவையில் 50 சதவீத பார்வையாளர்களுடன் அக்., 15 முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி..

புதுச்சேரியில் 50 சதவீத பார்வையாளர்களுடன் அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை திறக்க புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மதுபான கடைகள், பார், மதுபானக் கூடங்கள் கலால் விதிமுறைப்படி இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதுபோல் பள்ளிகள் 5 -ஆம் தேதி முதல் திறந்து இருக்கும் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.