10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு குளறுபடி பள்ளிக்கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவு..

10-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் திங்கள் கிழமை அறிவிக்கப்பட்டது. கரோனா பாதிப்பால் இந்தாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்வு முடிவில் பல குளறுபடிகள் நடைபெற்றதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பள்ளி இடை நின்ற மாணவர்களுக்கு தேர்வு அனுமதி சீட்டு எப்படி தயாரிக்கப்பட்டது என பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் பள்ளி கல்வித்தறை இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டது.