11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை பொதுத்தேர்வு : ஒன்றிய அரசு முடிவு…

புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை பொதுத்தேர்வு நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்தும் வகையில் பாடத்திட்டத்தை ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் மாற்றியமைக்கிறது. 2 முறை நடத்தப்படும் தேர்வில் எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவித்துள்ளது.