12ம் வகுப்பு பொதுத்தேர்வு, பாதுகாப்பு காரணமாக கோவையில் மோடி பேரணிக்கு அனுமதி மறுப்பு …

கோவையில் மோடி பேரணிக்கு அனுமதி மறுத்து காவல் துறை விளக்கம் அளித்தள்ளது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் மோடி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

பிரதமருக்கு உள்நாட்டு, வெளிநாட்டு மத மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. “பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு வரும் ஒவ்வொருவரையும், நுழைவு வாயிலில் நிறுத்தி சோதனை செய்யப்படும்.

ஆனால், சாலையில் 4 கி.மீ. தூரத்திற்கு பேரணி நடக்கும் போது ஒவ்வொரு தனி நபரையும் சோதனை செய்வது கடினமானது என்றும் விளக்கமளித்துள்ளது.