15 – 18 வயது மாணவர்களுக்கான கரோனா தடுப்பூசி திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

15 – 18 வயது மாணவர்களுக்கான கரோனா தடுப்பூசி திட்டத்தை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் 15 – 18 வயது மாணவர்களுக்கான கரோனா தடுப்பூசி திட்டம் மூலம் நாடு முழுவதும் தடுப்பூசி திட்டம் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் 15 – 18 வயது மாணவர்களுக்கான கரோனா தடுப்பூசி திட்டத்தை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
10, 11 & 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு நாளை முதல் பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்தப்படும்.தடுப்பூசி செலுத்த மாணவ மாணவிகள் பெற்றோருடன் வர வேண்டும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் உடனிருக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.