32-வது ஒலிம்பிக் போட்டி :டோக்கியோவில் கோலாகலத்துடன் தொடங்கியது.

ஐப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி கோலாலகத்துடன் தொடங்கியது.
உலகின் வண்ணவிழாவான ஒலிம்பிக் போட்டி 2020 கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இன்று முதல் ஆகஸ்ட் 8-ம் தேதிவரை நடைபெறுகிறது. இன்று தொடக்க வபிழாவில் அனைத்து நாட்டு வீரர்கள் தங்கள் பாராம்பரிய உடையுடன் பவனிவந்தனர்.
இந்திய வீரர்கள் வெற்றி நடையுடன் வந்தனர். முன்னதாக இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான தீபிகா குமாரி தரவரிசையில் 9 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதுபோல் ஆடவர் வில்வித்தை போட்டியில் 32-வது இடத்தை பிடித்துள்ளனர்.