9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு..

தமிழகத்தில் கடந்த 2019 ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் அதன் எல்லை வரையறை காரணமாக வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, நெல்லை,தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை, தற்போது இந்த 9 மாவட்டங்களுக்கு தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையர் வெளியட்டுள்ளார்
அதன்படி

தேர்தல் அறிவிப்பு , மனு தாக்கல் தொடக்கம் – செப் 15

வேட்புமனு தாக்கல் நிறைவு – செப் 22

வேட்புமனு ஆய்வு – செப். 23

திரும்ப பெறுதல் – செப். 25

முதல் கட்ட தேர்தல் – அக் 6

2 வது கட்ட தேர்தல் – அக். 9

வாக்கு எண்ணிக்கை – அக் 12