ஏசிசி ஆடவர் எமெர்ஜிங் ஆசிய கோப்பை 2023 : பாகிஸ்தான் அணி சாம்பியன்..

பாகிஸ்தான் ஏ அணி இந்தியா ஏ அணியை 128 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இலங்கையில் நடைபெற்று வரும் ஏசிசி ஆடவர் எமெர்ஜிங் ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி இந்தியா ஏ அணியை 128 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் ஏ அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்இழப்பிற்கு 352 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இந்திய ஏ அணி 40 ஓவர்களில் அனைத்த விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்களையே பெற்றது. பாகிஸ்தான் அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை வென்றது.